நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் இன்று (20.04) மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் மேற்கு தென்மேற்கு கடலோரங்களில் காலையில் மழைக்கான சாத்தியம் நிலவும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் காற்று வீசுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக காணப்படலாம் எனவும் இக்காற்றின் வேகம் மணிக்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் வீசலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
எனினும் நாட்டைச்சூழவுள்ள கடலோரங்கள் கடினமாக காணப்படாது என்றும் மிதமான காலநிலையுடனே காணப்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் பலத்த காற்று வீசுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதால் பொதுமக்களை அவதானமாக இருக்கும்படி வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.






