பட்­ட­தாரி பயி­லுநர்­களை இலங்கை ஆசி­ரியர் சேவையில் ஆட்­சேர்க்க விண்­ணப்­பம் கோரல்!!

758

aApplication

பட்­ட­தாரி பயி­லுநர்­களை இலங்கை ஆசி­ரியர் சேவை வகுப்பு 3-1(அ) ஆம் தரத்­திற்கு ஆட்­சேர்க்க கல்­வி­ய­மைச்சு வர்த்­த­மானி மூலம் விண்­ணப்­பங்­க­ளைக் ­கோ­ரி­யுள்­ளது.

அவர்கள் தேசி­ய­ பா­ட­சா­லை­களில் க.பொ.த. உயர்­த­ர­ வ­குப்­பு­களில் நிலவும் கணிதம், விஞ்­ஞானம், வர்த்­தகம், தக­வல்­தொ­ழி­னுட்பம், ஆங்கி­ல­மொழி ஆகிய பாடங்­களில் காணப்­படும் வெற்­றி­டங்­க­ளுக்கு நிய­மிக்­கப்­ப­டு­வார்கள்.

07.12.2011ஆம் திக­திய அமைச்­ச­ர­வைத்­தீர்­மா­னத்­திற்­க­மை­வாக வர­வு­–செ­ல­வுத்­திட்ட யோச­னை­களை வினைத்­தி­றன்­மிக்கதாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை வகுத்தல் என்­ப­தன்கீழ் பயிலுநர்­க­ளாக ஆட்­சேர்க்­கப்­பட்டு தற்­ச­மயம் பயிற்சி பெறு­கின்ற அல்லது அந்­நி­கழ்ச்­சித்­திட்­டத்­தின்கீழ் பயிற்சி பெற்­ற­தன்­ பின்னர் அபிவிருத்தி உத்­தி­யோ­கத்தர் பத­வியில் நிய­மனம் பெற்­றுள்ள பட்டதாரிக­ளினுள் இலங்­கை­ ஆ­சி­ரிய சேவை­யினுள் நுழை­ய­வி­ரும்பும் பட்­ட­தா­ரிகள் இதற்கு விண்­ணப்­பிக்­க­மு­டியும்.

விண்­ணப்­ப­ மு­டி­வுத்­ தி­கதி 04.05.2015 ஆகும். போட்­டிப்­ப­ரீட்சை மற்றும செயல்முறைப் பரீட்சை, நேர்முகத்தேர்வு போன்றவற்றினூடாக தெரிவுகள் இடம்பெறும். மேலதிக விபரங்களுக்கு 17.04.2015 அரச வர்த்தமானியைப் பார்க்கலாம்.