தேர்தல் நடத்தப்படாமல் இலங்கைக் கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபை நிறுவப்பட் டுள்ளமையினால் சர்வதேச கிரிக்கட் பேரவை அதிருப்தியடையும். இதனால் ஐ.சி.சியினால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த ரூபா 7000 இலட்சம் நிதியுதவி கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவருமான திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் சில மாதங்களில் நடக்கவிருக்கும் சர்தேச கிரிக்கெட் கவுன்ஸிலின் வருடாந்த சம்மேளனக் கூட்டத்திற்கான அழைப்பை இலங்கைக்கு விடுக்காமல் இருப்பதற்கும் சாத்தியம் இருப்பதாகவும் திலங்க சுமதிபால எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று சுதந்திரக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக் கிரிக்கெட் இடைக்கால சபையில் ஐ.சி.சி. திருப்தி கொள்ளாது. இது மிகப்பெரிய அபாயமாகும். நிர்வாக சபையை தெரிவு செய்ய முறையான தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம். அல்லாத பட்சத்தில் இலங்கை கிரிக் கெட் சிக்கலுக்குள்ளாகும் அல்லாத பட்சத்தில் இலங்கை கிரிக் கெட் சிக்கலுக்குள்ளாகும் அபாயம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






