வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா(படங்கள் காணொளி)

525

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று (02.05.2015 செவ்வாய்க்கிழமை)காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் கொடிதம்ப பூசை இடம்பெற்று காலை ஏழுமணிளவில்   வசந்தமண்டப பூஜையும்  தொடர்ந்து  எட்டுமணியளவில் எம்பெருமான்  விநாயகபப் பெருமானும் சண்டேஸ்வரரும்  திருத்தேரில் ஆரோகணித்தனர் .

பின்னர் ரதோற்சவம் இடம்பெற்று காலை ஒன்பது மணியளவில் ரதம் இருப்பிடத்தை வந்தடைய தொடர்ந்து அர்ச்சனைகள் இடம்பெற்றன .இன்றைய தேர்த்திருவிழாவின் போது அடியார்கள் அங்கபிரதட்சணம் அடியடித்தால் மற்றும் கற்பூர சட்டி ஏந்தி தமது நேர்த்திகடன்களை நிறைவு செய்தனர் .

இத் தேர்த் திருவிழாவில் நூற்றுகணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டனர் .பின்னர் காலை பதினொன்றரை மணியளவில் பச்சை சாத்தும் உற்சவம் இடம்பெற்றது .

வவுனியா நகர செய்தியாளர் 

 

 20150502_052725 20150502_071846 20150502_071159 20150502_071027 20150502_070825 20150502_070644 20150502_065707 20150502_063036 20150502_061352

20150502_072035 20150502_083512 20150502_082243 20150502_081807 20150502_081337 20150502_075723 20150502_075208 20150502_075135 20150502_074649 20150502_074432 20150502_074312 20150502_073621

20150502_083723 20150502_120043 20150502_120018 20150502_115938 20150502_114915 20150502_092431 20150502_091313 20150502_091215 20150502_085438 20150502_085434 20150502_084828 20150502_084531