வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று (02.05.2015 செவ்வாய்க்கிழமை)காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் கொடிதம்ப பூசை இடம்பெற்று காலை ஏழுமணிளவில் வசந்தமண்டப பூஜையும் தொடர்ந்து எட்டுமணியளவில் எம்பெருமான் விநாயகபப் பெருமானும் சண்டேஸ்வரரும் திருத்தேரில் ஆரோகணித்தனர் .
பின்னர் ரதோற்சவம் இடம்பெற்று காலை ஒன்பது மணியளவில் ரதம் இருப்பிடத்தை வந்தடைய தொடர்ந்து அர்ச்சனைகள் இடம்பெற்றன .இன்றைய தேர்த்திருவிழாவின் போது அடியார்கள் அங்கபிரதட்சணம் அடியடித்தால் மற்றும் கற்பூர சட்டி ஏந்தி தமது நேர்த்திகடன்களை நிறைவு செய்தனர் .
இத் தேர்த் திருவிழாவில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் .பின்னர் காலை பதினொன்றரை மணியளவில் பச்சை சாத்தும் உற்சவம் இடம்பெற்றது .
வவுனியா நகர செய்தியாளர்