அவுஸ்ரேலியாவை வந்தடைந்த மயூரன் மற்றும் சானின் பூதவுடல்கள்!!(படங்கள்)

805

இந்தோனேஷியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ சானின் பூதவுடல்கள் இன்று அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு மூன்று நாட்களின் பின்னர், விமானத்தின் மூலம் அவர்களின் பூதவுடல்கள் சிட்னி நகருக்குக் கொண்டு வரப்பட்டதாக ஏபிசி செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

இப்போதைய சூழ்நிலையில், இருவரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான திட்டங்கள் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.

எனினும், மரணதண்டனை விதிக்கப்பட்ட சமயத்தில் மதகுருவாக மாறிய அன்ட்ரூ சானின் இறுதிக்கிரியைகள் மதச்சடங்காக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1 2 3 4 5