ஐ.எஸ். தீவிரவாதிகள், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டிற்கு உள்ளான நபர் ஒருவருக்கு உயரமான கட்டடமொன்றின் கூரையிலிருந்து கீழே தள்ளிய பின் கற்களால் எறிந்து தம்மால் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்தத் தண்டனை நிறைவேற்றத்தின் போது கூரையின் மீது 11 தீவிரவாதிகள் காணப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடியை ஏந்தியிருக்கிறார். இந்நிலையில் கீழே விழுந்து படுகாயமடைந்த அந்நபரை தீவிரவாதிகள் கற்களால் எறிந்து கொல்கின்றனர்.
சிரிய ரக்கா நகரில் இடம்பெற்ற இந்த மரணதண்டனை நிறைவேற்றத்தை பெருந்தொகையான மக்கள் கூடியிருந்து அவதானித்துக் கொண்டிருந்துள்ளனர்.
அதேசமயம் மதுபானம் அருந்தியமை, போதைவஸ்தை பாவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தம்மால் பிடிக்கப்பட்ட இருவருக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் சாட்டையால் அடித்து தண்டனையை நிறைவேற்றுவதை வெளிப்படுத்தும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
கைகள் கட்டப்பட்ட நிலையில் நின்றிருந்த அந்த இருவருக்கும் தீவிரவாதிகள் சாட்டையால் அடித்து இவ்வாறு தண்டனை நிறைவேற்றுவதையும் பெருந்தொகையான பொதுமக்கள் கூடியிருந்து வேடிக்கை பார்த் துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.