ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவருக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகளால் கற்களை எறிந்து மரண தண்டனை!!

399

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், ஓரினச் சேர்க்கையில் ஈடு­பட்­ட­தாக குற்­றச்­சாட்­டிற்கு உள்­ளான நபர் ஒரு­வ­ருக்கு உய­ர­மான கட்­ட­ட­மொன்றின் கூரை­யி­லி­ருந்து கீழே தள்­ளிய பின் கற்­களால் எறிந்து தம்மால் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்­ளனர்.

இந்தத் தண்­டனை நிறை­வேற்­றத்தின் போது கூரையின் மீது 11 தீவி­ர­வா­திகள் காணப்­ப­டு­கின்­றனர். அவர்­களில் ஒருவர் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் கொடியை ஏந்­தி­யி­ருக்­கிறார். இந்­நி­லையில் கீழே விழுந்து படு­கா­ய­ம­டைந்த அந்­ந­பரை தீவி­ர­வா­திகள் கற்­களால் எறிந்து கொல்­கின்­றனர்.

சிரிய ரக்கா நகரில் இடம்­பெற்ற இந்த மர­ண­தண்­டனை நிறை­வேற்­றத்தை பெருந்­தொ­கை­யான மக்கள் கூடி­யி­ருந்து அவ­தா­னித்துக் கொண்­டி­ருந்­துள்­ளனர்.

அதே­ச­மயம் மது­பானம் அருந்­தி­யமை, போதை­வஸ்தை பாவித்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டு­களின் கீழ் தம்மால் பிடிக்­கப்­பட்ட இரு­வ­ருக்கு ஐ.எஸ் தீவி­ர­வா­திகள் சாட்­டையால் அடித்து தண்­ட­னையை நிறை­வேற்­று­வதை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­டங்­களும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

கைகள் கட்­டப்­பட்ட நிலையில் நின்­றி­ருந்த அந்த இரு­வ­ருக்கும் தீவி­ர­வா­திகள் சாட்­டையால் அடித்து இவ்வாறு தண்டனை நிறைவேற்றுவதையும் பெருந்தொகையான பொதுமக்கள் கூடியிருந்து வேடிக்கை பார்த் துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

11 12 13