வாக்காளர் இடாப்பு பதிவு பத்திரம் 15ம் திகதி தொடக்கம் விநியோகம்!!

637

Election

எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் வாக்காளர் இடாப்பு தொடர்பான பத்திரத்தை கிராம சேவகர்கள் வீட்டுக்கு வீடு சென்று விநியோகிப்பர் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இப்பணி ஜூன் 15ம் திகதி நிறைவு பெறும் என செயலகம் குறிப்பிட்டுள்ளது. எனினும் சேவை அவசியம் கருதி அக்காலம் நீடிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிராம சேவகர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. கிராம சேவகர் வழங்கும் பத்திரத்தை சரியாக நிரப்பி மீண்டும் கிராம சேவகரிடம் கையளிக்க வேண்டும்.

இந்த பத்திரத்தில் கையொப்பமிடும் நடவடிக்கை தேர்தல்கள் ஆணையாளரால் செப்டெம்பர் மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த தேர்தலில் 2015 வாக்காளர் இடாப்பை பயன்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.