15 வயது மாணவியை பஸ்ஸில் கடத்திச் சென்ற இளைஞன் கைது!!

335

Love

15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை அவளது பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்று கொண்டிருந்த 21 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு 7 மணியளவில் ஆனமடு புத்தளம் வீதியில் பஸ் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதே சந்தேக நபர் மாணவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமது மகளை யாரோ ஒரு இளைஞன் கடத்திக் கொண்டு செல்வதாக மாணவியின் பெற்றோர் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இத்தகவலைப் பெற்றுக் கொண்ட ஆனமடு பொலிஸ் நிலைய வீதிப் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், உடன் செயற்பட்டு ஆனமடுவிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ் வண்டியை வழிமறித்து சோதனை செய்த போது அதனுள்ளிலிருந்த சந்தேக நபரையும், மாணவியையும் கைது செய்துள்ளார்.

குறித்த மாணவிக்கும் சந்தேக நபருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ள ஆனமடு பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.