மைதானம் மூடப்பட்டுள்ளதால் பிரதான வீதியில் விளையாடிய இளைஞர்கள்!!

285

விளையாட்டு வீரர்களுக்காக அமைக்கப்பட்ட டன்பார் பொது விளையாட்டு மைதானம் மூன்று மாதத்திற்கு மூடப்பட்டுள்ளதால் மைதானத்தை உடனடியாக திறக்கும் படி கோரி ஹட்டன் விளையாட்டுதுறை பயிற்சியார்களும் இளைஞர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹட்டன் நகர மணிகூட்டு கோபுரத்திற்கு முன்னால் பிரதான வீதியில் ஆர்ப்பபாட்டத்தில் ஈடுப்பட்டவாரே பயிற்சிகளை மேற்கொண்டனர்.

இவர்கள் மைதானத்தை வியாபாரமாக்காதீர் ரூபா 5500 அதிகமில்லையா? அரசியலுக்கு பொது மைதானத்தை அடகு வைக்காதே, நகர பிதாவுக்கு மட்டுமா மைதானம், பொது மைதானம் பொது மக்களுக்கு இல்லையா? என பாதாகைகளை ஏந்தியாவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

01.05.2015 அன்று முதல் 01.08.2015 அன்று வரை மைதானம் மூடப்பட்டுள்ளதாக அறிவித்தல் பலகை மைதானத்தின் நுழைவாயில் போடப்பட்டுள்ளது. இதனால் எங்களது பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் வேறு பல தூரத்திலுள்ள மைதானங்களுக்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்கின்றோம் என இவர்கள் தெரிவித்தனர்.

1 2 4 5 3