பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் அதிபர் விபத்தில் பலி!!

770

ppt

பருத்தித்துறை 1ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் அதிபர் கனகசபாபதி அருளானந்தம் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஹாட்லி கல்லூரியின் முன்னாள் அதிபர் மீது யாழ் நோக்கி சென்ற பஸ் மோதியதிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளை திடீரென திருப்புவதற்கு முயற்சி செய்த போதே விபத்து நேர்ந்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பஸ்ஸின் சாரதி சம்பவ இடத்திலேயே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.