நாட்டின் பலபாகங்களிலும் மழை பெய்யும் சாத்தியம்!!

526

Train

வானிலையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் நாட்டின் பெரும்பாலான பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இம் மழைவீழ்ச்சியின் அளவானது 100 மில்லி மீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளதுடன் அனைத்து பிரதேசங்களிலும் மாலையில் அல்லது இரவிலும் மழைக்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது.

புத்தளம் மாத்தறை கொழும்பு காலி முதலான கடலோரங்களில் காலையில் மழைக்கான சாத்தியம் அதிகளவில் காணப்படும் எனவும் இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் பலத்த காற்று வீசுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதால் பொதுமக்களை அவதானமாக இருக்கும் படி வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இரவில் அதிகளவிலான இடி முழக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பஸ்யால பிரதேசத்தில் ஆகக்கூடிய மழைவீழ்ச்சியாக 85.1 மில்லிமீற்றர் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.