இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் 12 வருடங்களின் பின்னர் கைது!!

658

Arrested

மட்டக்களப்பில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான, முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் திகதி மட்டக்களப்பு ஆரையம்பதி – செல்வா நகரிலுள்ள வீடொன்றினுள் புகுந்த சந்தேகநபர் ரீ.56 ரக துப்பாக்கியால் சுட்டும் கைக்குண்டுகளை வீசியும் உள்ளார். இதனால் இருவர் உயிரிழந்ததோடு, எட்டுப்பேர் படுகாயமடைந்திருந்தனர்.

இந்தநிலையில் சம்பவம் இடம்பெற்று 12 வருடங்கள் கழித்து குறித்த சந்தேகநபர் இன்று அதிகாலை காத்தான்குடி பொலிஸாரால் ஆரையம்பதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவர் ஆரையம்பதியைச் நேர்ந்த நாகமணி ஜெகன் அல்லது ஜெகதீஸ்வரன் என தெரியவந்துள்ளது.

இவரை இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.