லண்டனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மர்மமான முறையில் மரணம்!!

312

Uk

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ள சம்பவம் ஒன்று பிரித்தானியாவில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

பிரித்தானியாவின் கிழக்கு லண்டனில் சாட்வெல் ஹெல்த் பகுதியை சேர்ந்தவர் புல்லர்கட்டில் ரித்திஸ்குமார். அவருக்கு ஷிகி என்ற மனைவியும் நியா மற்றும் நேகா என்ற மகள்களும் இருந்தனர்.

இந்நிலையில் க்ரூவ் வீதியில் உள்ள அவர்கள் வீட்டில் ஷிகி மற்றும் மகள்கள் நியா, நேகா ஆகியோர் இறந்து கிடந்த நிலையில் அவர்களின் சடலங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேள அவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர்கள் உடலில் எந்த காயங்களோ அடி தழும்புகளோ எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வால்டம்ஸ்டொ பகுதியில் உள்ள வுட்போர்ட் நீர்த்தேக்கம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ரித்திஸின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தவர்கள் பற்றி கூறிகையில் , அவர்கள் இங்கு 8 ஆண்டுகளாக வசித்து வந்தனர், மிகவும் அமைதியானவர்களாகவும் மனிதநேயமிக்கவர்களாவும் காணப்பட்டார்கள் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவ் மரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.