பொலிஸ்காரரின் கண் பார்வையை பறித்த மில்லரின் சிக்ஸர்!!

249

Millar

ஐ.பி.எல். தொடரில் டேவிட் மில்லர் சிக்ஸர் அடித்த பந்து தாக்­கி­யதில் மைதா­னத்தில் பாது­காப்பு பணியில் இருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரின் கண் பார்வை பறிபோனது.

கடந்த மே 9ஆம் ஆம் திகதி ஈடன் கார்டன் மைதா­னத்தில் கொல்­கத்தா அணி பஞ்சாப் அணி­யுடன் மோதி­யது. இந்த போட்­டியில் பஞ்சாப் அணி வீரர் டேவிட் மில்லர் 11
பந்துகளில் 27 ஓட்­டங்­களைக் குவித்தார். ரசல் பந்தில் மில்லர் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்தில் இருந்த அலோக் ஏய்ச் என்ற பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரின் கண்ணை நேர­டி­யாக வந்து தாக்­கி­யது. பந்து தாக்­கிய வேகத்தில் அவ­ரது வலது கண்ணில் பெரும் பாதிப்பு ஏற்­பட்­டது.

இதை­ய­டுத்து அலோக்கை மருத்­து­வ­ம­னையில் அனு­ம­தித்­தனர். ஆனால் அவரை பரி­சோ­தித்த மருத்­து­வர்கள், அலோக் கண்­பார்வை இழந்து விட்­ட­தாக தெரி­வித்­தனர். தற்­போது 53 வய­தான அலோக்கு இந்த சம்­ப­வத்­தை­ய­டுத்து வேறு­வி­த­மான பணி கொடுப்­பது குறித்து கொல்­கத்தா பொலிஸ் அதி­கா­ரிகள் ஆலோ­சித்து வரு­கின்­றனர்.

இந்­திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கங்­குலி இது குறித்து கூறு­கையில் இது எதிர்பாரா­த­வி­த­மாக நடந்த சம்­பவம். இதற்கு டேவிட் மில்லர் பொறுப்­பாக மாட்டார் என்றார்.