ஷேவாக், காம்பீர் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதா??

427

virender

இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஷேவாக், காம்பீர் இருவரது கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவிற்கு வந்துவிட்டதாக கருத்துக்கள் பரவி வரும் நிலைமையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும் தேர்வு குழு தலைவருமான கிரண்மோரே கூறும் போது,

ஷேவாக், காம்பீர், ஜாகீர்கான் ஆகியோரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடவில்லை. உள்ளூர் போட்டியில் அவர்கள் திறமையை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்திய கிரிக்கெட்டில் தற்போது ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. திறமையாக விளையாடினால் மட்டுமே அணியில் இடம் பெற முடியும். உடல் தகுதி இல்லாத ஷேவாக், காம்பீர், ஜாகீர்கான் அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவர்களது தங்கள் திறமையை வெளிப்படுத்தி முன்னேறுவார்கள் என்று கூறினார்.

இந்திய அணிக்கு ரோகித்சர்மா, ஷிகார்தவான் தற்போது தொடக்க வீரர்களாக உள்ளனர். இருவரும் நன்றாக ஆடுவதால் ஷேவாக், காம்பீர் ஆகியோர் அணியில் இருந்து தொடர்ந்து ஒரங்கட்டப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.