கடந்தவாரம்கூட்டு பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலையைக் கண்டித்து வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலய மாணவர்கள் இன்று(20.05.2015) காலை 10.00 மணியளவில் பாடசாலைக்கு அருகில் வீதியின் இருபுறமும் அணிவகுத்து நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பெற்றோர் என நூற்றுக்கணக்கானவர்களுடன் வடமாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி லிங்கநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். போராட்த்தின் இறுதியில் மாணவர்களது கோரிக்கைகளை அடங்கிய மகஜர் பாடசாலை அதிபர் வடமாகாண சுகாதார அமைச்சரிடம் கையளித்தார் .
மேற்படி ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள்
மாணவிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுங்கள்!
சட்டதரனியே சதி செய்யாதே!
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கு!
மலரை கசக்கிய மந்திகளை மன்னிக்காதே!
லஞ்சத்தால் நீதியை விலைக்கு வாங்காதே!
என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர் .
மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வடக்கிலும் கிழக்கிலும் பல்வேறு பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
படங்கள் :ஸ்ரீ நாகராஜா வித்தியாலயம்