கண்டி,பேராதனை பல்கலைக்கழகத்தின் 2014ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா இன்று காலை முதல் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. பல்வேறு துறைகளையும் சேர்ந்த 8000 மாணவர்கள் இந்த நிகழ்வின்போது பட்டமளிக்கப்படவுள்ளனர்.
இந்நிகழ்வின் ஆரம்பமாக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் அணிவகுத்துச்சென்றனர். தமிழ்,சிங்கள,ஆங்கில மொழித்துறை,வைத்தியம் மற்றும் பொறியியல் துறை உட்பட பல்வேறு துறைசார் மாணவர்கள் இதன்போது பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.