
மஹியங்கனை – அரால பிரதேசத்தில் 26 வயதான பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை கூரிய ஆயுதத்தால் தாக்கி அவரது கணவர் இவரைக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சந்தேகநபர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மஹிங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





