4 வயது குழந்தையை உயிருடன் அடுப்பில் போட்டு சமைத்த கொடூரன்!!

323

Man

அமெரிக்காவில் 4 வயது குழந்தையை உயிருடன் அடுப்பில் போட்டு சமைத்து கொன்ற குற்றவாளிக்கு விதித்த தீர்ப்பு தொடர்பாக மறுவிசாரணை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் உள்ள Maine மாகாணத்தை சேர்ந்த John Lane(66) என்பவர், கடந்த 1985ம் ஆண்டு கொடூரமாக நிகழ்த்திய குற்றம் அமெரிக்க நாட்டையே உலுக்கியிருந்தது.

ஜானிற்கு 36 வயதிருந்தபோது, அவர் வசித்த அதே பகுதியை சேர்ந்த Angela Palmer என்ற 4 வயது குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர், அந்த குழந்தையை கதற கதற மின்சார அடுப்பில் திணித்து விட்டு அதனை அதிகபட்சமான வெப்பத்தில் சூடுபடுத்தியுள்ளார்.
மேலும், குழந்தை வெப்பம் தாங்காமல் வெளியே குதிக்காமல் இருக்க, மின்சார அடுப்பின் இருபுறங்களையும் நாற்காலிகள் கொண்டு இறுக்கமாக அடைத்துள்ளார்.

நீண்ட நேரம் அடுப்பை கொதி நிலையிலேயே விட்டிருக்க அந்த வீடு முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இதனை அறிந்து அந்த பகுதி தீயணைப்பு வீரர்கள் வந்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

அங்கே அடுப்பிற்குள் அந்த பெண் குழந்தை முழுவதுமாக வெந்துபோய் இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர். இந்த கொடூர சம்பவத்தை பொலிசாருக்கு தெரிவித்ததும், அவர்களை ஜானை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

அப்போது, நீதிபதி கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜான், தான் கொன்றது ஒரு சாத்தான் என்றும் அது தன்னை கொல்லை முயற்சி செய்ததால் தான் அந்த குழந்தையை கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.

ஜானின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

சிறையில் அடைக்கப்பட்டு தற்போது 30 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தன்னுடைய வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என ஜான் கோரிக்கை விடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட நேரத்தில் தான் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாலும், அதை வழக்குடன் தொடர்பு படுத்தி தன்னுடைய வழக்கறிஞர் வாதாட தவறி விட்டார் என கூறியுள்ளார்.

நீதிபதியின் தீர்ப்பிற்கு எதிராக மறுவிசாரணை கோரியுள்ள ஜானின் விண்ணப்பத்திற்கு பதிலளிக்க இன்னும் 14 நாட்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.