பின்னழகை அதிகரிக்க சிகிச்சை பெறச் சென்ற பெண் மூச்சுத் திணறி பரிதாபகரமாக உயிரிழப்பு!!

342

Girl

அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத மருத்­து­வ­ரிடம் தனது பிருஷ்டப் பகு­தியை பெரி­தாக்­கு­வ­தற்­கான சிகிச்சையைப் பெறச் சென்ற பெண்ணொருவர் சிகிச்­சையின் போது மூச்சுத் திணறி பரிதாபகரமாக உயி­ரி­ழந்த சம்­பவம் அமெ­ரிக்க நியூயோர்க் நகரில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த சனிக்­கி­ழமை மாலை இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் புதன்கிழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

மேரி­லாண்ட்டைச் சேர்ந்த கெல்லி மேஹியூ (34 வயது) என்ற பெண்ணே இவ்­வாறு உயிரிழந்துள்ளார்.

தனது நண்­பி­யொ­ருவர் மூலம் தனக்கு அறி­மு­க­மான ரொக்வேய்ஸ் எனும் இடத்தைச் சேர்ந்த அங்கீ­க­ரிக்­கப்­ப­டாத பெண் மருத்­து­வ­ரிடம் தனது பிருஷ்டப் பகு­தியை பெரி­தாக்­கு­வ­தற்­கான சிகிச்சையைப் பெறச் சென்­றுள்ளார்.

இதன் போது அவர் மூச்சுத் திண­ற­லுக்கு உள்­ளாகி சுய உணர்வை இழந்­துள்ளார். இத­னை­ய­டுத்து மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்ட அவர் சிகிச்சை பய­ன­ளிக்­காத நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்­நி­லையில் அவ­ரது மரணம் தொடர்பில் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர்.