அங்கீகரிக்கப்படாத மருத்துவரிடம் தனது பிருஷ்டப் பகுதியை பெரிதாக்குவதற்கான சிகிச்சையைப் பெறச் சென்ற பெண்ணொருவர் சிகிச்சையின் போது மூச்சுத் திணறி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் அமெரிக்க நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
மேரிலாண்ட்டைச் சேர்ந்த கெல்லி மேஹியூ (34 வயது) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது நண்பியொருவர் மூலம் தனக்கு அறிமுகமான ரொக்வேய்ஸ் எனும் இடத்தைச் சேர்ந்த அங்கீகரிக்கப்படாத பெண் மருத்துவரிடம் தனது பிருஷ்டப் பகுதியை பெரிதாக்குவதற்கான சிகிச்சையைப் பெறச் சென்றுள்ளார்.
இதன் போது அவர் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி சுய உணர்வை இழந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரது மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.