9 வயதுச் சிறுமி ஒருவர் கடத்­தப்­பட்­டுள்ளார்!!

658

Kidnap

தனது பாட்­டியின் பாது­காப்­பில் இருந்த தில்­ஹனி என்ற சிறு­மி­யே இவ்­வாறு கடத்தப்பட்டுள்ளதாகவும் இச்­சம்­பவம் நேற்று முன் தினம் காலை 10.30 மணி­ய­ளவில் இடம்பெற்றுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குணசே­கர தெரி­வித்தார்.

எவ்­வாறெனி­னும் பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்­பாட்டின் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசா­ர­ணை­ நட­வ­டிக்­கையின் மூலம் சுமார் 9 மணி நேரத்தில் சிறுமி காட்டுப்பகு­தி­யொன்­றுக்குள் இருந்து கைவி­டப்­பட்ட நிலையில் மீட்­கப்­பட்­டார் என்றும் பொலிஸ் பேச்­சாளர் குறிப்­பிட்டார்.

மீட்­கப்­பட்ட அவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார். சந்­தேக நபர் அடை­யாளம் காணப்­பட்­டுள்ள நிலையில் அவரை தேடி இரா­ணு­வத்­தி­ன­ருடன் இணைந்து நட­வ­டிக்­கைகள் முன்னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தா­கவும் பொலிஸ்­பேச்­சா­ளர் சுட்­டிக்­காட்­டினார்.

நேற்று முன் தினம் காலை 10.30 அளவில் தில்­ஹானி தனது வீட்­டி­லி­ருந்து அருகில் உள்ள வர்த்­தக நிலையத்­திற்கு சென்­றுள்ளார். இதன் போது அங்கு வந்த நபர் ஒருவர் அவரை கடத்­திக்­கொண்டு கொஸ்­கெட்­டிய காட்டுப் பக்கம் சென்­றுள்ளார். பொலி­ஸா­ருக்கு விடயம் அறி­விக்­கப்­ப­டவே அவர்கள் விரைந்து விசா­ர­ணை­களை நடத்­தி­யுள்­ளனர்.

இதன் போது சிறு­மியின் தாயின் இளைய சகோ­த­ரியு­டன் தொடர்பை பேணு­ப­வ­ரே சி­று­மியைக் கடத்­தி­யுள்­ளதை பொலிஸார் கண்­ட­றிந்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து சிறு­மியை தேடும் நட­வ­­டிக்­கை­யை இரா­ணு­வத்­துடன் இணைந்து சுமார் 9 மணி நேரம் முன்­னெ­டுத்த பொலிஸார் கொஸ்­கெட்­டிய காட்­டி­லி­ருந்து சிறு­மியை மீட்­டனர்.

எனினும் சந்­தேக நபர் பெலவத்த குளத்தில் பாய்ந்து பிர­தே­சத்தை விட்டு தப்பிச் சென்­றுள்­ள­தாக கூறப்­படும் நிலையில் பிர­தே­சத்தின் காட்­டுப்­ப­கு­தியில் நேற்று முழு நாளும் விஷேட தேடு­தல்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­ற­து.