வவுனியாவில் உலக சுற்றாடல் தினத்தில்தமிழ் விருட்சத்தின் ஏற்பாட்டில் சித்திரப்போட்டி!(படங்கள்)

461

05.06.2015 உலக சுற்றாடல் தினத்தை ஒட்டி வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தில் செல்வி ஸ்ரீ.நிவேதனா மற்றும் தமிழ் விருட்ச அனுசரணையில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் ஏற்பாட்டில்” காடுகளை அழிக்காதே”,குளங்களை ஆக்கிரமிக்காதே எனும் தொனிபொருளில் சித்திர போட்டி 03.06.2015 அன்றும் ,வெற்றி பெற்றர்வர்களுக்கான பரிசளிப்பு 05.06.2015உலக சுற்றாடல் தினத்தன்றும்  நடை பெற்றது .

சித்திரபோட்டியில் 60க்கும் மேற்பட்ட ஆண்டு 06 தொடக்கம் சாதாரண தரம் வரை கற்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர் . சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலய அதிபர் திரு சி.வரதராஜா அவர்களின் தலைமையில் சித்திர ஆசிரியை பா.ஸ்ரீதேவி அவர்களின் நெறிபடுதலில் நடைபெற்ற இந்த சித்திரபோட்டியில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ),செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர் ,

1ம் நிலை இருந்து 10 ம் நிலை வரை சித்திர போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கூப்பன்களும்,பரிகளும் ,10 ம் நிலை தொடக்கம் 20 ம் நிலைவரை பெற்ற மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் 05.06.2015 சுற்றாடல் தினம் அன்று காலை 8.00 மணிக்கு பாடசாலை காலை பிரார்த்தனையின் போது வழங்கி வைக்கப்பட்டது .

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் கோட்ட கல்வி அதிகாரியும் ,வட மாகாணசபையின் உறுப்பினருமான திரு எம்,பி,நடராஜ் அவர்களும் ,சிறப்பு விருந்தினராக ஆசிரிய ஆலோசகர் திரு எஸ்.பத்மநாதன் அவர்களும் ,தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் )செயாளர் மாணிக்கம் ஜெகன் உட்பட அதிபர் ,பிரதி அதிபர் ஆசிரியர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

 முதல் 5 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ரூபா 1000,850,650,450,250,பண வவுச்சர்களும் ,பரிசுகளும் .அடுத்த 5 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ரூபா 150 பெறுமதியான பண வவுச்சர்களும் ,பரிசுகளும் வழங்கி வைக்க பட்டது .

timthumb (1) timthumb (2) timthumb (3) timthumb (4) timthumb (5) timthumb (6) timthumb (7) timthumb