வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்துக்கு புதிய உறுப்பினர்கள் சிலரை தெரிவு செய்யும் விசேட பொதுக்கூட்டம் நேற்றைய தினம் 07.06.2015 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது .
காலை பத்தரை மணியளவில் ஆரம்பமான விசேட பொதுகூட்டத்தில் அதிபர் மற்றும் பழைய மாணவர் சங்க தலைவர் திருட்செல்வம் திருஅருள் ஆகியோர் தலைமை வகிக்க சங்கத்தின் புதிய உபதலைவர் உப செயலாளர் மற்றும் பொருளாளர் அத்துடன் நிர்வாக சபை உறுப்பினர்கள் இருவர் தெரிவு செய்யபட்டனர் .
எதிர்காலத்தில் பாடசாலையில் மேற்கொள்ளப்படவேண்டிய அவசியமான வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.