யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் : 15 மாணவர்கள் விடுதலை!!

533

jaffna

யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 15 பாடசாலை மாணவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 47 சந்தேகநபர்களை யாழ், நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்திய போது 15 பாடசாலை மாணவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.