அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில், இம்முறை உயர்தரத்திற்குத் தோற்றவுள்ள கணித மற்றும் உயிரியல் பிரிவு மாணவர்களுக்கான பௌதீகவியல் பரிசோதனை இம்மாதம் 8 மற்றும் 9ம் திகதிகளில் வவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வவுனியாவில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். மாணவர்களின் கல்வியினை மையப்படுத்தி பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கும் இவ்வமைப்பானது தொடர்ந்தும் மாணவர்களுக்கான கல்விக்கான உதவிகளைச் செய்யும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
-கிருத்திகன்-






