கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 100 வெளிநாட்டு மது போத்தல்கள் மீட்பு!!

566

Arrack

கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை வாகன தரப்பிடம் பகுதியில் கைவிடப்பட்ட அறையொன்றில் இருந்து வெளிநாட்டு மதுபான போத்தல்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

விமான நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

9 வர்க்க மது போத்தல்கள் 100 இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது குறித்து காலால் திணைக்களத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.