களத்தடுப்பின் போது மோதிக்கொண்ட இரு வீரர்கள் ஆபத்தான நிலையில்!!

240

cricket

இங்­கி­லாந்தில் நடைபெற்று வரும் நாட் வெஸ்ட் கிரிக்கெட் தொடரில், ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்­டத்தின் போது களத்தடுப்பில் ஈடுபட்ட இரு வீரர்கள் பிடியெடுக்க முயன்ற போது மோதிக் கொண்டனர்.

இரு­வ­ருமே ஆபத்­தான நிலையில் மருத்து­வ­மனையில் அனு­ம­திக்கப்பட்டுள்ளனர். நாட்வெஸ்ட் தொட ரில் சஸ்சக்ஸ் நகரில் நடந்த ஆட்­டத்தில்இ சஸ்சக்ஸ் அணி­யுடன் சர்ரே அணி மோதி­யது.

19ஆவது ஓவரில் சஸ்சக்ஸ் அணி 141 ஓட்டங்கள் எடுத்­தி­ருந்­த­போது, பிடியாக வந்த பந்தை பிடிக்க சர்ரே அணி வீரர்கள் ராரி பர்ன்சும், மொய்சஸ் ஹென்­ரிக்சும் முயன்று மோதிக் கொண்­டனர். மோதிய வேகத்தில் இரு­வரும் பலத்த காய­ம­டைந்து மைதா­னத்தில் விழுந்­தனர்.

இரு­வ­ருக்­குமே பலத்த அடி­பட்­டி­ருந்­தது. அவர்கள் மைதா­னத்தில் கிடந்த நிலை சக வீரர்­க­ளுக்கு கடும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. மைதா­னத்தில் இருந்த பெண் ரசி­கைகள், கண்ணீர் விட ஆரம்­பித்­தனர். தொடர்ந்து அவர்­க­ளுக்கு அவ­சர சிகிச்சை அளிக்­கப்பட்­டது.

பின்னர் மைதா­னத்­திற்கு 3 அம்­பியூலன்ஸ்கள் வர­வ­ழைக்­கப்­பட்­டன. தொடர்ந்து காய­ம­ டைந்த பர்ன்சும், ஹென்­ரிக்சும் அங்­குள்ள ஷிசெ­ஸஸ்டர் மருத்­து­வ­ம­னை யின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டனர்.