வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவையொட்டிய நடைபவனியொன்று இன்று (20.06.2015) சனிக்கிழமை இடம்பெற்றது.
காலை10 மணிக்கு பாடசாலையின் பிரதான வாயில் முன்றலில் இருந்து பாடசாலையின் அதிபர் அருட் சகோதரி திரேசம்மா சில்வா தலைமையில் ஆரம்பமான நடைபவனியில் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவிகள், பெற்றோர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
-வவுனியா நிருபர்-



























