வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் நேற்று 20.06.2015(சனிக்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடைந்தன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
9 மணியளவில் ஆரம்பமான இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள் மற்றும் இன்னிசை நிகழ்வு என்பன அதிகாலை 5 மணிவரை நடைபெற்றது.
இந்நிகழ்வுகள் அனைத்தையும் வவுனியா நெற் இணையம் முழுமையாக நேரடி ஓளிபரப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
பகல் நிகழ்வுகள் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரையும் இரவு நேர நிகழ்வுகள் 9 மணிமுதல் அதிகாலை 5 மணிவரையும் மிகச் சிறப்பாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வெளிநாட்டில் வாழும் வவுனியா வாழ் உறவுகளை ஒன்றிணைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட நேரடி ஒளிபரப்புச் சேவையினை ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.








































