வவுனியாவில் வன்னியூர்க் கவிராயருக்கு அவருடைய சொந்த ஊராகிய செட்டிகுளம் இலுப்பைக்குளத்தில் சிலை!!( படங்கள்)

1220

வவுனியா மாவட்டத்தினதும், வன்னிப் பிரதேசத்தினதும் முன்னோடிக் கவிஞராகிய வன்னியூர்க் கவிராயருக்கு அவருடைய சொந்த ஊராகிய செட்டிகுளம் இலுப்பைக்குளத்தில் சிலைவடித்து நிறுவி அவருடைய இலக்கியப் பதிவுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்து கொண்டார். இன் நிகழ்வு நேற்று (20.06.2015) நடைபெற்றது.
இன் நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், முன்னோடி இலக்கியவாதிகள், புகழ்பூத்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டனர்.

வன்னியூர்க் கவிராயரின் கவிதைகள், சிறுகதைகள் அடங்கிய தொகுப்புக்கள், அவரைப்பற்றிய பல்வேறு பார்வை கொண்ட பதிவுகளான கட்டுரைத் தொகுப்புக்கள் அடங்கிய விழா மலர் என்பன வைபவரீதியாக வெளியிட்டு வைக்கப்பட்டன.

இந்த வெளியீடுகளின் முதற் பிரதி சிறப்புப் பிரதி என்பனவும் விருந்தினர்களால் முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட்டது. இலக்கிய உலகில் இலைமறைகாயாக இருந்து தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்து வன்னி மண்ணுக்குப் பெருமை சேர்த்த பெருமகனாகிய வன்னியூர்க்கவிராயருக்கு வன்னியூர்க் கவிராயர் கலை இலக்கிய பேரவையினர் பெரிய அளவில் விழா எடுத்து, அவரை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

-வவுனியா நெற் பிராந்திய செய்தியாளர்-

804506_381093888750599_1707822823_n 11103995_381093998750588_1155893416_n 11356250_381093905417264_178476412_n 11541163_381093922083929_1014969160_n 11541184_381094092083912_460426985_n 11637842_381093872083934_1674669492_n 11650633_381094075417247_1335489045_n 11650689_381094105417244_1908696392_n 11651151_381093965417258_1285400249_n 11653368_381093835417271_626700786_n 11653490_381093788750609_329020800_n