வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் பாலர் பாடசாலையின் விளையாட்டு போட்டி நேற்று(20.06) அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.சத்தியராஜ் தலைமையில் நடைபெற்றது.
வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சேமராஜா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர். வேப்பங்குளம் தூய சூசையப்பர் தேவாலய பங்குத்தந்தை லக்ஸன் டி சில்வா, ஓமந்தை பங்குத்தந்தை, ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-வவுனியா நிருபர்-






