வடமாகாண பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வவுனியா பிரதேச செயலக ஏற்பாட்டில் நேற்று (22.06.2015) பிற்பகல் பாடசாலை மாணவர்களுக்கான கலைத்துறை சார் பயிற்சி வழங்கும் வேலைத்திட்த்தின் கீழ் ஓவியப் பயிற்சி வவுனியா பிரதேச செயலாளர் திரு.கா. உதயராசா தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தலைவர் கலாநிதி அகளங்கன் மற்றும் வளவாளர்கள், திருமறைக் கலாமன்றத்தினர் என பலர் கலந்து கொண்டதுடன் மாணவர்களுக்கான பயிற்சிப் பாசறையில் மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன் அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
-பிராந்திய செய்தியாளர்-






