யாழ்ப்பாணத்தின் 9 ஆசனங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் : சம்பந்தன்!!

1039

Sambanthan

புதிய தேர்தல் முறை­யா­னது யாழ். மாவட்­டத்தின் பாரா­ளு­மன்றப் பிர­திநி­தித்­துவ எண்­ணிக்கை ஒன்­பது என்ற அடிப்­ப­டை­யி­ல் நிலை­பெறும் வகையிலும் அதே நேரம் வடக்கு, – கிழக்­குக்கு வெளியிலும் தமிழ் மக்­களின் வாக்­குகள் பெறு­மதி மிக்­க­தா­கவும் அர்த்த புஷ்­டி­யு­டை­ய­தா­கவும் இருக்கும் வகையிலும் அமைய வேண்டியது அவ­சியம் என்­பதை வலி­யு­றுத்­து­வதாக தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் நேற்று சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற புதிய தேர்தல் முறைமை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளைப் பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். சம்­பந்தன் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,

புதிய தேர்தல் முறை­மை­யா­னது பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண­வேண்­டிய தேவைப்­பாடு கொண்­ட­தாக இருக்­கி­றது. நாட்­டி­னதும், மக்­க­ளி­னதும் ஜன­நா­யக வாக்­கு­ரிமை வாக்­க­ளிப்பு ஆகியவற்­றுடன் தொடர்­பு­பட்­டுள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண­வேண்­டி­யுள்­ளது.

நாட்டு மக்­களால் அளிக்­கப்­ப­டு­கின்ற வாக்­குகள் பய­னுள்­ள­வை­யாக அமைந்­தி­ருக்­கின்­றன என்­பதை அவர்கள் உணர்வு பூர்­வ­மாக ஏற்கக் கூடி­ய­தாக இருக்க வேண்டும். இந்­நி­லைமை புதிய முறைமையில் உள்­வாங்­கப்­ப­டுதல் அவ­சி­ய­மாகும்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் அதி­க­மாக வாழ்­கின்ற அதே­வேளை அப்­ப­கு­தி­க­ளுக்கு வெளியில் மலை­ய­கத்­திலும் ஏனைய பகு­தி­க­ளிலும் தமிழ் மக்­களும் முஸ்லிம் மக்­களும் பரந்து வாழ்கின்றனர்.

ஆகவே இவ்­வாறு பரந்து வாழ்­கின்ற தமிழ் மக்­க­ளாலும் முஸ்லிம் மக்­க­ளாலும் வழங்­கப்­ப­டு­கின்ற வாக்­குகள் அர்த்­தப்­புஷ்­டி­யா­ன­வை­யாக இருப்­ப­தற்கு தேர்தல் முறை­மையை உறு­திப்­ப­டுத்த வேண்டும்.

மேலும் கலப்பு முறை தேர்தல் முறை­மையின் மூலம் வடக்கு, கிழக்­குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்கள் தமது பிர­தி­நி­தி­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்ளும் வகையில் புதிய முறை அமைய வேண்டும்.

வடக்கு, கிழக்கில் இன்று வாக்­கா­ளர்­களின் எண்­ணிக்கை பெரிதும் வீழ்ச்­சிக்­கண்­டுள்­ளது. அசாதாரண சூழல் கார­ண­மாக அங்­கி­ருந்து மக்கள் இடம்­பெ­யர்ந்து வாழ்­வ­தற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது அவர்­களால் ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளப்­பட்­டது கிடை­யாது. அதி­க­மானோர் கொல்­லப்­பட்டு விட்டனர். இன்னும் ஒரு தொகை­யினர் நாட்டை விட்டு வெளி­யே­றி­யுள்­ளனர்.

இடம்­பெ­யர்ந்த புலம்­பெ­யர்ந்த சக­லரும் இந்­நாட்டுப் பிர­ஜை­களே என்று சொல்­லிக்­கொண்­டாலும் அவர்கள் வாக்­காளர் பட்­டி­யலில் உள்­வாங்­கப்­ப­டா­த­வர்­க­ளா­கவே இருக்­கின்­றனர். இவ்­வாறு வாக்காளர் எண்­ணிக்கை வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளதால் யாழ் மாவட்­டத்தின் பிரதிநிதித்­துவ எண்ணிக்கையும் வீழ்ச்­சி­ய­டை­கின்­றது.

எனவே புதிய தேர்தல் முறை­மை­யா­னது யாழ் மாவட்­டத்தின் பிர­தி­நி­தித்­துவ எண்­ணிக்­கையில் வீழ்ச்சி ஏற்­ப­டா­த­வாறு ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். பிர­தி­நி­தித்­துவப் பாத­கங்கள் ஏற்படாத வண்ணம் பாது­காக்­கப்­ப­டுதல் அவ­சியம் என்­பதை வலி­யு­றுத்­து­கின்றேன்.

யாழ் மாவட்­டத்தை பொறுத்­த­வ­ரையில் அங்கு பாரா­ளு­மன்­றத்தை பிரதிநிதித்துவபடுத்துவதற்கென ஒன்­பது ஆச­னங்கள் இருத்தல் வேண்டும் என்ற யோசனை புதிய முறையில் உள்­ள­டக்­கப்­ப­டுதல் வேண்டும் என்­பதை பிர­தமர் ரணில் விக்ரமசிங்க, தினேஷ் குணவர்த்தன எம்.பி. மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் என சகலரும் கொண்டுள்ளனர்.

எனவே யாழ் மாவட்ட மக்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதுடன் இனியும் 20 வருடங்களுக்கேனும் யாழ் மாவட்ட எம்.பிக்களின் எண்ணிக்கையை ஒன்பதாக பேனுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என்றார்.