தமிழர் பண்டிகைகளில் ஒன்றான ஆடிப்பிறப்பினை முன்னிட்டு வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் பல்வேறு போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைவாக மேற்படி போட்டிகள் நடாத்தப்படவுள்ளன என வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா அறிவித்துள்ளார்.
தரம் 3 முதல் 5 வரையான வகுப்பு மாணவர்கள் மத்தியில் சோமசுந்தரப்புலவரும் ஆடிப்பிறப்பும் என்ற தலைப்பில் (5நிமிடம்) பேச்சுப் போட்டியும், தரம் 10, 11 வகுப்பு மாணவர்கள் மத்தியில் சோமசுந்தரப்புலவர் ஒரு தமிழ்ப் பண்பாட்டுப் புலவர் என்ற தலைப்பிலான (1000 – 1500 சொற்கள்) கட்டுரைப் போட் டியும்,
சோமசுந்தரப்புலவர் பாடிய ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை என்ற பாடலை மையமாகக்கொண்டு குழுப்பாடல் போட்டியும் (தரம் 6 முதல் 9 மாணவர்களுக்கானது),
ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை என்ற பாடலை மையமாகக்கொண்டு தனிப்பாடல் போட்டியும் (தரம் 11, 12 மாணவர்களுக்கானது) தற்கால சூழ்நிலையில் தமிழர் பண்டிகைகள் என்ற தலைப்பில் கவிதைப் பாடல் போட்டியும் (தரம் 10 முதல் 12 மாணவர்களுக்கானது) நடாத்தப்படவுள்ளன.
குறித்த போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் வவுனியா பிரதேச பாடசாலைகள் எதிர்வரும் 03.07.2015 இற்கு முன்னர் தமது விண்ணப்பங்களை பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அறிவித்துள்ளார்.