வவுனியா உக்குளாங்குளம் பாரதி முன்பள்ளி சிறுவர்களுக்கான விளையாட்டு விழா இன்று (28.06.2015) மாலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் இ.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜா, வவுனியா தெற்கு பிரதேச சபைச் செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், கிராமசேவையாளர் திருமதி ஆர்.ஜே.சுஜனிதா, முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர் திருமதி ச.அருள்வேல்நாயகி உட்படபலரும் கலந்து கொண்டனர்.
-பிராந்திய செய்தியாளர்-






