கொடிகம்பம் ஒன்று மின் கம்பத்தில் மோதியதில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிரேன்ட்பாஸ் – வதுல்வத்த பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கொடிகம்பத்தை தூக்கியபோது அதிசக்திவாய்ந்த மின் கம்பத்தில் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் 31 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.