2வது டெஸ்ட் இன்று ஆரம்பம் பதிலடி கொடுக்குமா அவுஸ்திரேலியா?

392

CRICKET-ENG-AUS-ASHES

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில், நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 14 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவை தோற்கடித்தது.

இந்தநிலையில் 2–வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று ஆரம்பமாகின்றது. இதில் அவுஸ்திரேலிய அணி பதிலடி கொடுக்கும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ் முறையால் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் சர்ச்சை ஏற்பட்டது.

இங்கிலாந்து வீரர் டிராட்டுக்கு டி.ஆர்.எஸ். முறையில் கொடுக்கப்பட்ட ஆட்டமிழப்பு மற்றும் ஆட்டமிழப்பு என்று நன்றாக தெரிந்தும் ஸ்டூவர்ட் பிராட் ஆடுகளத்தை விட்டு செல்ல மறுத்தது ஆகியவற்றின் காரணமாக இந்த டெஸ்ட் மிகுந்த விமர்சனங்களுக்குள்ளானது,

இந்த நிலையில் டி.ஆர்.எஸ். முறையால் எந்த தீர்வும் ஏற்பட போவதில்லை என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ஆசஷ் டெஸ்ட் தொடரில் டி.ஆர்.எஸ். முறை பயன்படுத்தியது சரியானதாக தெரியவில்லை. சில பிரச்சினைகள் சரி செய்யப்படலாம். ஆனால் ஓட்டு மொத்த தீர்வாக இல்லை என்றார்.