ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் நயன்தாரா. ரஜினி தொடங்கி சூர்யா, விஜய், அஜித், ஆர்யா, சிம்பு, தனுஷ், ஜீவா என தமிழின் அத்தனை முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்துவிட்டார்.
சிம்பு, பிரபுதேவா, ஆர்யா என காதல் சூறாவளிகள் சுற்றிச் சுற்றி அடித்தாலும், எல்லாவற்றையும் தாக்குப்பிடித்து இன்று வரை தன்னுடைய மார்க்கெட்டை டொப் கியரில் கொண்டு செல்கிறார்.
தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளத்திலும் இவருடைய மார்க்கெட் உச்சத்தில்தான் உள்ளது. தற்போது ஆர்யாவுடன் “ராஜா ராணி”, அஜித்தின் 53-வது படம், உதயநிதியுடன் “இது கதிர்வேலன் காதல்” என தமிழில் அவர் பிஸியோ பிஸி.
அதேபோல் தன்னுடைய சம்பளத்தையும் அதிரடியாக உயர்த்தி விட்டார் நயன்தாரா. “இது கதிர்வேலன் காதல்” படத்தில் நடிப்பதற்காக ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறாராம் நயன்தாரா.
இந்த நிலையில், ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடிப்பதற்காக நயனிடம் பேசியுள்ளனர். ஜெயம் ராஜா இயக்கும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம் நயன். அதைக்கேட்டு ஆடிப்போன தயாரிப்பு தரப்பு சம்பளத்தைக் குறைக்கும்படி கேட்டிருக்கிறார்களாம்.