உதவிக்காக காட்டையே கொளுத்திய பெண்!!

358

Help

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள காட்டுப் பகுதியில் கடந்த சனிக்கிழமை திடீரென காட்டுத் தீ பரவியதை வனத்துறை அதிகாரி ஒருவர் கண்டுபிடித்தார். உடனே அங்கு தீயணைப்பு வண்டியுடன் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்காக வீரர்கள் அங்கு சென்ற போது, அங்கு ஒரு காரில் ஒரு பெண்ணும், புதிதாக பிறந்த பெண் குழந்தையும் இருப்பதை கண்டனர்.

உடனே அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது பல்வேறு தகவல்கள் வெளிவந்தது.

பாங்க்பான் என்ற அந்த பெண்ணுக்கு கடந்த வியாழக்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையுடன் அவர் 3 நாட்களாக அந்த காரிலேயே அந்த பகுதியில் தவித்துள்ளார்.

3 அப்பிள்கள், ஒரு போத்தல் குடிநீர், சிறிதளவு சோடாவை தவிர வேறு எதுவும் அவரிடம் இல்லை.

தொலைபேசி வசதியும், காரில் பெட்ரோல் இல்லாததால், வெளி உலகத்துடன் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவேதான் பிறரின் கவனத்தை ஈர்க்க அவர் காட்டுக்கு தீ வைத்துள்ளார்.

அந்த பெண் பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு சென்றிருக்கலாம் என்றும், அங்கு குழந்தை பிறந்தவுடன், யாருக்கும் சொல்லாமல் மருத்துவமனையை விட்டு வெளியேறியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து மேற்கொண்டு எதையும் தெரிவிக்காத அவர்கள், அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.