சிம்பாப்வே ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே, அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு பயணம் செய்து அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் திருமணம் செய் வதற்கான தனது விருப்பத்தை வெளியிடவுள்ளதாக வேடிக்கையாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 50 மாநிலங்களில் தன்னினச் சேர்க்கைத் திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறித்து கேலி செய்யும் வகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
பராக் ஒபாமா தன்னினச்சேர்க்கைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியதையடுத்து தான் முடிவொன்றுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்த ரொபேர்ட் முகாபே, “தேவைப்படும் பட்சத்தில், நான் வோஷிங்டனுக்குச் சென்று பராக் ஒபாமாவின் முன் முழந்தாளிட்டு அவரது கையை முத்தமிடுவதற்காக தருமாறு கேட்பேன்” என அவர் கூறினார்.
“முறையற்ற புணர்ச்சியை மேற்கொள்வதற்கு மனிதர்களுக்கு இறைவன் தடை விதித்துள்ள நிலையில், கிறிஸ்துவின் கட்டளைகளை மீற அவர்கள் எவ்வாறு துணிந்தார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்காவானது உயர்ந்த கிறிஸ்தவ கொள்கைகளின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள போதும், அரசியல் ரீதியான ஊழலால் தனது முடிவுக்கு மட்டுமே வழிவகை செய்யக்கூடிய பாதையில் செல் கிறது என முகாபே குறிப்பிட்டார்.