தயாரிப்பாளர், விநியோகஸ்தர், வில்லன் – விஷாலின் அவதாரங்கள்!

318

vishal

செல்லமே படத்தின் மூலம் சினிமா உலகில் காலடி வைத்தவர் விஷால். இதுவரை 12 தமிழ்ப் படங்களில் நடித்து விட்டார். ஒருசில படங்களில் சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டியிருக்கிறார்.

இவர் நடித்த “பட்டத்து யானை” அடுத்த வாரம் ரிலீஸாக உள்ளது. அடுத்ததாக “மதகஜ ராஜா”வும் ரிலீஸிற்குத் தயாராக இருக்கிறது. இதனையடுத்து தற்போது “பாண்டிய நாடு” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதுவரை நடிகராக மட்டுமே இருந்து வந்த விஷால் சுசீந்திரன் இயக்கும் “பாண்டிய நாடு” படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார். அதைத் தொடர்ந்து இப்போது விநியோகஸ்தராகவும் அவதாரம் எடுத்து இருக்கிறார்.

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விஷால் ஐஸ்வர்யா அர்ஜுன் நடித்துள்ள “பட்டத்து யானை” படத்தை சென்னை முழுவதும் விஷால் தான் வாங்கி வெளியிடுகிறார்.

மேலும் தன்னுடைய நீண்ட நாள் ஆசை ஒன்றையும் வெளிப்படுத்தி இருக்கிறார் விஷால். வில்லனாக நடிக்க வேண்டும் என்பது தான் அவருடைய ஆசையாம்.

அவன் இவன் படத்தில் பெண்மை கலந்த வேடத்தில் கூட நடித்து விட்டேன். அதேபோல வில்லன் ரோலும் கிடைத்தால் மகிழ்ச்சியுடன் நடிப்பேன் என்று சொல்லியிருக்கிறார் விஷால்.