பெண்களை துஷ்பிரயோகம் செய்து இரத்தம் குடித்த இளைஞர் கைது!!

296

Rape

பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவர்களது இரத்தத்தை குடிக்கும் பழக்கமுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்காவின் வெஸ்ட்மோர் லேண்ட் கவுன்ட்டிக்கு அருகேயுள்ள வேன்டர்கிப்ட் பகுதியை சேர்ந்த ஜொனாத்தன் ரியான் டேவிஸ் (21), பெண்களிடம் காம லீலை செய்வதில் வல்லவராக இருந்துள்ளார்.

சமீபத்தில் 14 வயது சிறுமி உட்பட மூன்று பெண்களை பூங்கா ஒன்றில் சந்தித்த ரியான், அவர்களை பேச்சால் மயக்கி ஆள்நடமாட்டம் குறைவான பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றுக்குள் உள்ள தனிமையான அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.

முதலில் அந்த 14 வயது சிறுமியையும் பின்னர் அடுத்தடுத்து இரு இளம்பெண்களையும் துஷ்பிரயோகம் செய்தார் ரியான் டேவிஸ்.

பின்னர், தனது கை மணிகட்டை கத்தியால் அறுத்து கொண்டார். அந்த பெண்களை நரம்பு அறுபட்டு பீய்ச்சியடித்த இரத்தத்தை குடிக்க வைத்தார். பிறகு, அந்த பெண்களின் கை மணிகட்டுகளை அறுத்து, அதில் இருந்து வழிந்த இரத்தத்தை நால்வரும் மாறி, மாறி குடித்து அரக்கத்தனமான இன்பம் அனுபவித்துள்ளனர்.

இந்த கொடூர அனுபவம் பற்றி இதில் தொடர்புடைய ஒரு பெண் அளித்த புகாரையடுத்து, ஜொனாத்தன் ரியாஸ் டேவிஸை கைது செய்த பொலிசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வீடியோ கேம்சில் வரும் ’மபினோகி’ கதாபாத்திரத்தை பார்த்து, காம உறவுக்கு பின்னர் இளம்பெண்களின் இரத்தத்தை சுவைக்கும் பழக்கம் தனக்கு வந்துவிட்டதாக பொலிசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, பிணையில் விடுதலையாகி இருக்கும் ரியான் மீதான மறுவிசாரணை வரும் 7ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.