தாயின் 15 வருட எதிர்பார்ப்பு முகப்புத்தகம் மூலம் நிறைவேற்றியது!!

298

காணாமல்போன தனது மகனை 15 வருடங்களின் பின்னர் முகப்புத்தகத்தின் உதவியுடன் தாயொருவர் கண்டுபிடித்துள்ளார். இச் சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காணாமல் போன தனது மகனை 15 வருடங்களின் பின்னர் முகப்புத்தகத்தில் வெளியான ஒரு புகைப்படத்தின் மூலம் குறித்த தாய் கண்டுபிடித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹோப் ஹொலன்ட் , கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தனது மகனுக்கு 3 வயதாக இருக்கும் போது எனது கணவர் மகனை கடத்தி சென்றுள்ளார்.

பின்னர் குறித்த தாயினால் அவரது மகனான ஜொனத்தனை பார்க்க முடியவில்லை. தாய் எவ்வளவு முயற்சி செய்தும் மகனை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
மகனை காணாததால் தாய் ஒருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்தும் அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. பின்னர் தாய் தனது மகனை எப்படியாவது பார்ப்பேன் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் மகனான ஜொனத்தன் தனது முகப்புத்தகத்தில் தனது சிறுவயது புகைப்படத்தை தரவேற்றியதையடுத்து தாயும் அந்த புகைப்படத்தை எதேச்சையாக தனது முகப்புத்தகத்தில் அவதானித்துள்ளார். பின்னர் தாய் தனது மகனுடன் தொடர்பு கொண்டு 15 வருடங்களின் பின்னர் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 2