வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலி!!(அதிர்ச்சிப் படங்கள்)

560

வவுனியா நெடுங்கேணி புளியங்குளம் வீதியில் இன்று (10.07.2015) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

இன்று மாலை 6.30 மணியளவில் வவுனியா நெடுங்கேணி புளியங்குளம் வீதி குழவிசுட்டான் சந்தியிலிருந்து 500 மீட்டர் தொலைவில் முல்லைதீவிலிருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி பயணித்த மகேந்திரா பட்டா ரக வாகனம் கட்டுபாட்டை இழந்து மரத்தின்மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் வாகனத்தின் சாரதியும் நடத்துனரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

சாரதி உறங்கியதால் இவ் விபத்து நிகழ்ந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இவ் விபத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த முஹமது நிஜாஸ், புத்தளம் நுரைச்சோலையைச் சேர்ந்த
ஏ.எச்.எம்.ரியாஸ் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெடுங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக செய்திகளைத் தெரிந்துகொள்ள வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

-B.மோகன்ராஜ் மற்றும் Y.கிருபன்-

11736923_692663737532343_686540369_n 11736923_692663737532343_686540369_n (1) 11720677_692671447531572_1419334635_n 11721092_692663794199004_908220068_n 11720743_692663800865670_1451246760_n 11713566_692663814199002_802470290_n 11739760_692663864198997_1125880893_n 11121632_692671544198229_2016034409_n 11713648_692671594198224_514303503_n 11737175_692664030865647_1557733437_n 11719861_692664067532310_1162065221_n 11736942_692672187531498_977684618_n 11720721_692664070865643_2102708596_n 11715877_692672754198108_307841743_n 11717128_692672877531429_683033814_n 11741739_692673007531416_605047532_n 11719933_692673444198039_1840659793_n 11692938_692673630864687_2124050741_n 21720535_692673804198003_311785539_n