செட்டிகுளம் மற்றும் நெடுகேணி பிரதேசங்களில் ஊடுருவும் காட்டு யானைகளினால் பயன்தரு பயிரினங்களுக்கு சேதம் !

363

elephant-attack

செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட  நித்திய நகர்  நித்திய குளம் மற்றும் கந்தசாமிநகர்  அரசடிமுறிப்பு  ஆகிய கிராமங்களில் ஊடுருவும்  காட்டு யானைகள் பயன்தரு பயிர்களை  சேதமாகி  வருகின்றன.

 அதேபோன்று  வவுனியா வடக்கு நெடுங்கேணி தெற்குக்கிராமம் நெடுங்கேணி வடக்குக்கிராமம் நெடுங்கேணி சேனப்பிலவுக்கிராமம் நெடுங்கேணி பிரதான கடைகள் போன்ற இடங்களில் காட்டு யானைகளின் தொல்லை தொடர்ச்சியாக அதிகாரித்து கொண்டே இருக்கின்றது.

இதனால் இரவு வேளைகளில் மக்கள் நித்திரை விழித்து அச்சத்துடன் காணப்படுகின்றார்கள் நள்ளிரவு வேளையில் மட்டும் புதிதாக நடப்பட்ட 20 ற்கு மேற்பட்ட தென்னங்கன்றுகள் வரை பயன் தரும் பப்பாசி மரம் வாழைமரம் வீடுகள் கடைகள் அதிகளவு உடைத்து சேதப்படுத்தி வருவதாக மக்கள் கவலை தெரிவித்து வருவதோடு இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு வந்து இந்த காட்டு யானைகளினை கட்டுப்படுத்தத் தரும்படி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.