யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!(படங்கள்)

381

முல்லைத்தீவு, விசுவமடு குளத்தில் குளிக்கச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் 3 மணியளவில் இத்துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது .

வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதான இரண்டு மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நீரில் மூழ்கிய இரண்டு மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்திருந்ததாக தர்மபுரம் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 2 3