வேட்புமனுத் தாக்கல் நாளை நண்பகலுடன் நிறைவு!!

298

Election dept

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் நாளை வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளன.

இதேவேளை வௌ்ளிக்கிழமை வரை அங்கீகரிக்கப்பட்ட 47 கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் 111 சுயேட்சைக்குழுக்களும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்துள்ளன.