இந்தியாவுக்கு அடுத்ததாக தென்னாபிரிக்காவையும் புரட்டியெடுத்த பங்களாதேஷ்!!

234

Ban

பங்களாதேஷ் – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று மிர்புர் நகரில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 162 ஓட்டங்களில் சுருண்டது.

அந்த அணியின் டு பிளிசிஸ் அதிகபட்சமாக 41 ஓட்டங்களையும், பெஹார்டியன் 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிஸ்தாபிஜூர் ரஹ்மான், சுழற்பந்து வீச்சாளர் நசீர் ஹொசைன் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள்.

பின்னர் 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷின் தமீம் இக்பால், சவுமியா சர்கார் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தமீம் இக்பால் 5 ஓட்டங்களுடனும், அடுத்து வந்த லிட்டான் தாஸ் 17 ஓட்டங்களுடனும் பெவிலியின் திரும்பினர்.

3வது விக்கெட்டுக்கு சவுமியா சர்கார் உடன் மெக்முதுல்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தென்னாபிரிக்காவின் பந்து வீச்சை விளாசித் தள்ளியது. குறிப்பாக சவுமியாக சர்கார் அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் விளையாடிய மெக்முதுல்லா அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் சாஹிப் அல் ஹசன் களம் இறங்கினார்.

பங்களாதேஷ் அணி 27.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்று வெற்றியைத் தனதாக்கியது.

சவுமியா சர்கார் 88 ஓட்டங்களுடனும் சாஹிப் அல் ஹசன் ஓட்டங்கள் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 15-ம் திகதி நடைபெறும் கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

சமீபத்தில் இந்தியாவை பங்களாதேஷ் அணி 2-1 என வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.