மன நிம்மதியைப் பெறுவதற்கான மூன்று வழிகள்!!

555

M

நம்மைச் சுற்றி நடக்கும் செயல்களும், சூழலும் சில வேளைகளில் நமது மன அழுத்தத்தினை அதிகரிக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும் போது மன அமைதி கிடைக்காது. இந்த வேளைகளில் நமது மூளை ஒரு ஓய்வு நிலைக்கே வராது.

உதாரணமாக, நாம் தூங்காமல் விழித்திருக்கும் பல இரவுகளை நினைத்துப் பாருங்கள், அந்த ஒவ்வொரு இரவிலும் எதையாவது ஒரு பிரச்சனையினை தீர்ப்பது குறித்து நாம் சிந்தித்து இருப் போம். அந்த பிரச்சனைக்கான தெளிவான முடிவு நமக்கு கிடைக்கும் வரை நமக்கு தூக்கம் வராது.

இப்படி நம்மைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளை நாம் மாற்ற இயலாது, ஆனால் நம்மை மாற்றிக் கொள்ளலாம். இந்த பிரச்சனைகளை சமாளிக்க வாழ்க்கையின் பிற செயல்களையே நாம் கையில் எடுத்துக்கொள்ளலாம். வாழ்க்கையில் மூன்று விடயங்களை செயல்படுத்துவதன் மூலம் நாம் நமது மன அமைதியினை பெற்றுக்கொள்ள முடியும்.

அந்த மூன்று விஷயங்களைப் பற்றிதான் தற்போது விரிவாகப் பார்க்கப் போகின்றோம்.

1. எதிலும் சிறிதாக ஈடுபடுங்கள்

மன அழுத்தம் வருவதற்கு முக்கிய காரணம் நாம் ஒரு செயலில் அதிக ஈடுபாடு காட்டுவதுதான். நீங்கள் அதிக பசியுடன் இருந்தால், தேவையான தூக்கம் இல்லாமல் இருந்தால் கண்டிப்பாக இது போன்ற மன அழுத்தம் ஏற்படும்.

இது போன்ற நேரங்களில் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு நிதானமாக சாப்பிடுங்கள், நிம்மதியாக உறங்க முயற்சி செய்யுங்கள், உணவு முறையில் சத்தான மற்றும் சிறிது சூடான உணவுகளை சாப்பிடத் தொடங்குங்கள்.

உங்களுக்குப் பிடித்தவர்களுடன் நேரத்தினை செலவிடுங்கள். பொதுவான விடயங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
மிக நெருங்கியவராக இருந்தால் அவர்களைக் கட்டிப் பிடித்தல், முத்தம் கொடுத்தல், கை கோர்த்துக் கொண்டு பூங்கா அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் ஒரு உலா சென்று வாருங்கள்.

இப்படி உங்களுக்கு மிகவும் பிடித்த செயல்களில் தொடர்ந்து ஈடுபடுங்கள். இது உங்களின் மூளைக்கும், மனதிற்கும் ஒரு புத்துணர்ச்சியினைக் கொடுக்கும். இந்த புத்துணர்ச்சி எத்தகைய பிரச்சனை வந்தாலும் உங்களின் மனதினை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.

அத்துடன் தேவையில்லாத குழப்பங்களையும் குறைக்கும். அதனால் எப்பிரச்சனை வந்தாலும் நீங்கள் தனிஆளாக நின்று சமாளிக்கும் தைரியம் உங்களுக்குக் கிடைக்கும்.

2. கவலை ஏதுமில்லை

முதல் யோசனை சரியாக வராதபட்சத்தில் இசை உங்களுக்குக் கைகொடுக்கும். உங்களுக்குப் பிடித்ததிலே மிகவும் அருமையான பாட்டு என்றவுடன் நினைவிற்குவரும் பாடல்களைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.

அவற்றைக் கேட்கத்தொடங்குங்கள், அவை உங்களின் மனதினை அழுத்தமான சூழ்நிலையில் இருந்து மென்மையான சூழ்நிலைக்குத் திருப்பிவிடும். மாறாக எரிச்சலூட்டும் பாடல்களை நீங்கள் கேட்கும் பட்சத்தில் உங்களின் கோபம், எரிச்சல், மன அழுத்தம் அனைத்தும் அதிகமாகக்கூடும்.

3. அமைதிக்கு நேரம் ஒதுக்குங்கள்

ஒருவேளை இசையும் உங்களுக்குக் கைகொடுக்க வில்லை என்றால் என்ன செய்வீர்கள், தலையை பிய்த்துக்கொள்ளலாம் போலத் தோன்றும். அப்போது அமைதிக்கான நேரத்தினை எடுத்துக்கொள்ளுங்கள். இது கண்டிப்பாக உங்களுக்கு உதவும். நாம் அமைதியாக இருக்க முயலும் போது நமது மூச்சில் நமது கவனம் கொஞ்சம் வரும், அதுவே நமது மன அழுத்தத்தினை குறைக்க உதவும்.

உதாரணமாக, நீங்கள் உங்கள் மன எண்ணங்கள் அனைத்தையும் அடக்கிக்கொண்டு நிதானமாக இருக்க முயலுங்கள் தற்போது உங்களின் இதயத்துடிப்பினைக்கூட உணர இயலும். இதற்கு யோகா, தியானம் ஏன் தூக்கம்கூட உதவலாம்.

நாம் தூங்கி எழும்போது நமது மூளையில் தேவையில்லாமல் சேர்த்து வைக்கப்பட்டிருந்த நினைவுகள் , பிரச்சினைகள் அனைத்தும் அகற்றப்பட்டு புத்துயிர் பெற்றிருக்கும். ஒரு சிறு தூக்கம் அல்லது சிறிது நேரம் நீங்கள் கண்னை மூடி இருப்பதுகூட உங்களின் மனதில்உள்ள பிரச்சனைகளை வெகுவாகக் குறைக்கும்.

இந்த அமைதிக்குப் பின்னர் நீங்கள் செய்யும் எந்தவொரு செயலிலும் தெளிவான சிந்தனையுடன் நீங்கள் ஈடுபட இயலும். இதற்குக் காரணம் நமது நரம்புகள் ஒரு சிறு ஓய்வு பெற்று மீண்டும் செயலாற்ற தொடங்குவதே ஆகும்.

அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறுவது வேண்டுமானால் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் அது அவ்வளவு எளிதான விஷயமல்ல. மன அமைதி கிடைக்காமல் இருப்பவர்கள் பலர் உள்ளனர். ஆனால் ஒருமுறை அமைதிக்கான வழியினை சரியாகக் கண்டுபிடித்துவிட்டால் பின்னர் அதே பாதையில் ஒ வ்வொரு முறையும் பயணம் செய்யலாம்.

இந்த பாதை உங்களின் வாழ்க்கை முறையுடன் ஒன்றியிருக்க வேண்டும்.
மேற்கூறப்பட்ட அனைத்தும் நாம் பிரச்சினைகளில் இருக்கும்போது மட்டும் செய்தால் போதாது, ஒவ் வொரு நாளும் நம்மை புதுப்பித்துக்கொள்ள பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அது பழக்கமாக மாறும். நாம் எளிதாக மகிழ்ச்சிபெற வழி வகுக்கும்.

நிம்மதியான வாழ்க்கையினைப் பெற நிம்மதியில்லாமல் அலையும் இந்த வாழ்க்கை முறையில் இதுபோன்ற பழக்கங்கள் நம் மனதையும், மூளையையும் தினமும் பல்லாயிரக்கணக்கான பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு தயார்படுத்தும்.