வவுனியா பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த இப்தர் நிகழ்வு நேற்று (15.07.2015) மாலை வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு.கா.உதயராசா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர மற்றும் வடமகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா சமயத்தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர்கள், முஸ்லிம் சமூகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
-பிராந்திய செய்தியாளர்-






